×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கல்லூரி மாணவி காதலனால் கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்; போதை பழக்கத்தை கண்டித்ததால் பயங்கரம்.!

கல்லூரி மாணவி காதலனால் கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்; போதை பழக்கத்தை கண்டித்ததால் பயங்கரம்.!

Advertisement

காதலியை வெட்டி கொலை செய்த காதலன், அதற்காக தெரிவித்த காரணங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி, ராதாபுரம் பகுதியை சேர்ந்த மாணவி தரணி (வயது 20). இவர் விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இன்று காலை 6 மணியளவில் மாணவி தரணி தனது வீட்டருகே மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். 

அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், குடும்பத்தினர் அங்கு விரைந்தனர். மாணவி நிகழ்விடத்திலேயே பலியானதால், விக்கிரவாண்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மாணவி தரணியின் உடலை மீட்டனர். 

தரணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், மதுரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரும், தரணியும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

மதுபோதைக்கு அடிமையான கணேசனின் செயல்பாடுகள் மாற்றம் அடைந்ததால், அப்பழக்கத்தை கைவிட பலமுறை தரணி காதலனிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், வெளியூரில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த கணேசன், போதை பழக்கத்தை கைவிடவில்லை. 

இதனால் காதலனுக்கு இறுதி கெடு விதித்த தரணி போதை பழக்கத்தை கைவிடாவிட்டால் இனி எப்போதும் பேசமாட்டேன் என எச்சரித்துள்ளார். எந்த பலனும் இல்லாததால் தரணி காதலரோடு பேசாமல் இருந்துள்ளார். இதனால் இன்று அதிகாலை காதலியை நேரில் சந்தித்த காதலர், தன்னுடன் பேச கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால், தரணி அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த கணேசன் காதலியை வெட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றார். காவல் துறையினர் விசாரணை நடத்தி 2 மணிநேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தமிழ்நாடு #tamilnadu news #Crime news #விழுப்புரம் மாவட்டம் #vizhupuram district #murder case #police investigation #Nursing Student
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story