×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இளம்பெண் மீது ஆசிட் வீசி தாக்குதல்.. கோவையில் பரபரப்பு சம்பவம்..! 

இளம்பெண் மீது ஆசிட் வீசி தாக்குதல்.. கோவையில் பரபரப்பு சம்பவம்..! 

Advertisement

கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த பெண்மணியின் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்டாலின். இவரின் மனைவி ராதா (வயது 34). இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஸ்டாலினுக்கும் - ராதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக கணவரை பிரிந்த ராதா கோயம்புத்தூருக்கு வந்துள்ளனர். 

கோயம்புத்தூரில் உள்ள அம்மன்குளம் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்த ராதா, நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அப்பகுதியில் செயல்பட்டு வரும் மளிகைக்கடைக்கு பால் வாங்க சென்றுள்ளார்.

கடையில் பாலை வாங்கிவிட்டு வீட்டிற்கு நடந்து வந்துகொண்டு இருக்கும் போது, வீட்டின் அருகே மறைந்திருந்த மர்ம நபர் ராதாவின் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் ராதாவின் இடதுபக்க முகம், தோள்பட்டை, இடதுகை போன்ற இடங்களில் ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. 

வலியால் துடித்த ராதாவை அப்பகுதி வழியாக சென்றவர்கள் உடனடியாக மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். ராதாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர், ராதாவின் மீது ஆசிட் வீசியது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore #Dharmapuri #tamilnadu #woman #Acid attack #police
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story