தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோவையை அதிரவைத்த குடும்பத்தினர் தற்கொலை; கடன் நெருக்கடி விவகாரத்தில் 2 பேர் கைது.!

கோவையை அதிரவைத்த குடும்பத்தினர் தற்கொலை; கடன் நெருக்கடி விவகாரத்தில் 2 பேர் கைது.!

Coimbatore Vadavalli Family Suicide 2 arrested  Advertisement

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி, வேம்பு நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் (வயது 34). இவர் தனியார் எஞ்சினியரிங் டிசைனராக வேலை பார்க்கிறார். இவரின் மனைவி லக்ஷியா. குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து வந்திருக்கிறார். 

தம்பதிகளுக்கு ரக்ஷிதா என்ற 10 வயது மகள் இருக்கிறார். ராஜேஷின் தாயார் பிரேமா (வயது 73). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். நேற்று இவர்களின் வீட்டில் துர்நாற்றம் வீசிய நிலையில், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வடவள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

Coimbatore

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கதவை உடைத்து உள்ளே சென்று பரத்பொது, ராஜேஷ் தூக்கில் சடலமாக இருந்துள்ளார். லக்ஷயா, ரக்ஷிதா, பிரேமா ஆகியோர் விஷம் அருந்தி சடலமாக இருந்துள்ளனர். நால்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கடன் தொல்லை காரணமாக அனைவரும் தற்கொலை செய்தது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் தீபக், ஜெயபாரத் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore #Vadavalli #family #suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story