×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோவை: பணத்திற்காக விஷஊசி செலுத்தி கால்டாக்சி ஓட்டுநர் கொலை.. தம்பதி பரபரப்பு வாக்குமூலம்.!

கோவை: பணத்திற்காக விஷஊசி செலுத்தி கால்டாக்சி ஓட்டுநர் கொலை.. தம்பதி பரபரப்பு வாக்குமூலம்.!

Advertisement

கால்டாக்சி ஓட்டுநர் மர்மமாக உயிரிழந்த வழக்கில், பணத்திற்காக விஷஊசி செலுத்தி கொலை செய்த தம்பதியை அதிகாரிகள் கைது செய்தனர். 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி, ஓணாம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் சனு. இவர் கால் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி சனு மர்மமான முறையில் உயிரிழக்கவே, அவரின் உடலில் காயங்கள் இருந்துள்ளது. இதனால் அவரின் இறப்பில் மர்மம் இருப்பதாக சனுவின் உறவினர்கள் மற்றும் சக ஓட்டுனர்கள் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்த நிலையில், கொலையாளியை கைது செய்ய 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. விசாரணையில், 8 ஆம் தேதி தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவர், சனுவின் கால் டாக்சியில் பயணம் செய்தது உறுதியானது. 

அவரிடம் நடந்த விசாரணையில், பணத்திற்காக ஸ்டீபன் மற்றும் அவரின் மனைவி அமலோற்பவம் சேர்ந்து, சனுவை கட்டையால் தாக்கி, விஷ ஊசி செலுத்தி கொலை செய்ததும் அம்பலமானது. இருவரையும் கைது செய்த அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் இவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் இருவர் மீதும் ஏற்கனவே இது போன்ற விஷ ஊசி செலுத்தி கொலை செய்த இரண்டு கொலை வழக்குகள், ஆயுத வழக்கு ஆகியவை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore #Thondamuthur #tamilnadu #Murder #police
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story