×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"அவன் தான் எனக்கு வேணும், நீங்கல்லாம் வேண்டாம்" - காவல் நிலையத்தில் கதறிய இளம்பெண்..! இறுதியில் ட்விஸ்ட்.!

அவன் தான் எனக்கு வேணும், நீங்கல்லாம் வேண்டாம் - காவல் நிலையத்தில் கதறிய இளம்பெண்..! இறுதியில் ட்விஸ்ட்.!

Advertisement

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரின் மகள் நாகஜோதி (வயது 22). வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுக்கத்தூர் வணிக தெருவில் வசித்து வருபவர் முருகன். இவரின் மகன் சுரேஷ் (வயது 22). 

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 26ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். வேலூர் புதிய பேருந்து நிறுத்தம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் காதல் ஜோடி மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டது. 

தனது மகள் மாயமானது தொடர்பாக பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், காதல் ஜோடி வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தது. 

அங்கு பெண்ணின் பெற்றோர் நாகஜோதியிடம் பேச்சுவார்த்தை நடத்த, காதலனே தனக்கு வேண்டும் என அதிகாரிகள் முன்பு நாகஜோதி கதறியழுதார். இதனால் பெண்ணின் உறவினர்கள் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

காதலனே வேண்டும் என அடம்பிடித்த பெண்மணி காதலர் சுரேஷோடு அனுப்பி வைக்கப்பட்டார். இருதரப்பு பெற்றோரிடமும் அதிகாரிகள் எழுதி வாங்கிக்கொண்டனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore #tamilnadu #pollachi #Love
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story