×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

11 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையை திறந்து வைத்த தமிழக முதல்வர்! உச்சகட்ட மகிழ்ச்சியில் விவசாயிகள்!

cm oppened mettur dam

Advertisement

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதன் படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

இதற்கு முன்பு 2008ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால் அதற்க்கு பின்னர் போதிய நீர் இல்லாத காரணத்தால் ஜூன் 12ம் தேதி என்ற குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்படவில்லை. 

இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு 2020 இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதியான இன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்காக வழக்கமாக தண்ணீர் திறக்க வேண்டிய தேதி ஜூன் 12 ஆம் திறந்தால், ஜனவரி 28 வரை 231 நாட்களுக்கு 300 டிஎம்சி அளவுக்கு நீர் பயணிக்கும்.

இந்தநிலையில், இன்று தமிழக முதல்வர் மேட்டூர் அணையின் 8 கண் மதகு பகுதியில் மலர் தூவி அணையை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். நீண்ட வருடத்திற்கு பிறகு இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dam #eps #metur
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story