×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நள்ளிரவில் 15 வயது சிறுமியின் கை, கால்களை கட்டி அரங்கேறிய கொடூரம்! விடிந்ததும் சிறுமி செய்த ஆச்சரியமான, அதிரடி காரியம்!

Child marriage done for 15 year child

Advertisement

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி பாதிக்கப்பட்டவர்கள்  மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து வருகிறது.  இத்தகைய ஊரடங்கால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில்  கட்டாய மற்றும் குழந்தை திருமணங்கள் பெருமளவில் அதிகரித்து வருகிறது. 

 இவ்வாறு வேலூர் மாவட்டத்தில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகள் 4 பேருக்கு பெற்றோர்களால் கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் நடத்தி வைக்கப்படவிருந்தது. ஆனால் இதுகுறித்து ரகசியமாக தகவல் தெரியவந்த  நிலையில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்தி, சிறுமிகளை மீட்டு அரசு காப்பகங்களில் தங்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கழிஞ்சூரை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு இரவில் வலுக்கட்டாயமாக திருமணம் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து மறுநாள் விடிந்ததும் சிறுமி வீட்டை விட்டு வெளியேறி நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று இதுகுறித்து புகார் அளித்துள்ளார். 

இது குறித்து சிறுமி கூறுகையில், இரவில் எனது பாட்டி வீட்டில் நான் நன்கு தூங்கிக் கொண்டிருந்த போது, எனது கை கால்களை கட்டி,  கழுத்தில் தாலி  கட்டிவிட்டனர். இந்நிலையில் விடிந்ததும் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் புகார் கொடுக்க இங்கு வந்துவிட்டேன் எனக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சமூக நலத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சிறுமியை மீட்டு பாதுகாப்பான காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Child marriage #vellore #complaint
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story