×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடும்பத்தினரின் அஜாக்கிரதை! தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து 1½ வயது குழந்தை! பரிதாப சம்பவம்!

child died in water pucket

Advertisement

சென்னை கொத்தவால்சாவடி சின்னத்தம்பி தெருவைச் சேர்ந்தவர் உசேன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமான நிலையில் 1 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.

இந்தநிலையில் கடந்த 26-ஆம் தேதி வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை திடீரென தண்ணீர் வாளிக்குள் தலை குப்புற விழுந்து விட்டது. இதனையடுத்து நீண்ட நேரமாக குழந்தையின் சத்தமும் கேட்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் குழந்தை விளையாடிய இடத்தில் வந்து பார்த்துள்ளனர். ஆனால் குழந்தையை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குழந்தையை அங்கும்இங்குமாக தேடி அலைந்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தண்ணீர் வாளிக்குள் குழந்தை தலைகுப்புற விழுந்து மூச்சுத்திணறி தவிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதனையடுத்து குழந்தையை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. 

இதுபற்றி கொத்தவால்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் இருந்தவர்களின் அஜாக்கிரதையால் குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#child #died
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story