ஆசை ஆசையாக ஓடியாடி விளையாடிய சிறுமிகள்.! பரிதாபமாக போன 2 உயிர்கள்.! சோக சம்பவம்.!
தமிழகத்தின் தருமபுரியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவருக்கு இளையராணி என்ற பெண்ணுடன் திருமணமாகி இந்த தம்பதிக்கு, சாதிகா என்ற 5 வயது மகளும், தனுஸ்ரீ என்ற 3 வயது மகளும் ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளனர்.
இந்தநிலையில் கொட்லுமாரம்பட்டியில் உள்ள பாட்டி வீட்டிற்கு முருகேசனின் பிள்ளைகள் சென்றுள்ளனர். இந்தநிலையில் சிறுமிகளின் பாட்டி அங்குள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வயலுக்கு தண்ணீர் பாயச்சுவதற்காக 4 அடி ஆழத்துக்கு தண்ணீர் சேமித்து குட்டையில் வைக்கப்பட்டிருந்தது.
அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சந்துரு மற்றும் சிறுமிகள் இருவரும் குட்டையில் இறங்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக குட்டையில் இருந்த தண்ணீரில் சிறுமிகள் இருவரும் மூழ்கி விட்டனர். சிறுவன் சந்துரு குட்டையில் இருந்து மேலே ஏறி வந்து அழுதுள்ளான். சிறுவனின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். ஆனால் சிறுமிகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362