தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 34 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்!
Child affiliated corona in chennai
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 34 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 51 முதியோரும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸின் பரவல் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது.
தமிழகத்தில் நேற்று 19 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னையில் 1 வயது பெண் குழந்தையும் சேர்த்து 26 குழந்தைகள் உள்பட 509 பேரும், திருவள்ளூரில் 47 பேரும், செங்கல்பட்டில் 4 வயது ஆண் குழந்தையையும் சேர்த்து 6 குழந்தைகள் உள்பட 43 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 34 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 51 முதியோரும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,907 ஆண்களுக் கும், 2,295 பெண்களுக்கும் மற்றும் இரண்டு 3-ம் பாலினத் தவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362