ஏழை குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!
Chief Minister statement for poor people
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அதில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
ரூ.2,000 உதவித்தொகை வழங்க ரூ.1200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். மேலும் கஜா புயல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் சிறப்புதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தான், மக்களை கவரும் நோக்கில் ஆளும் கட்சி இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டு வருகிறது என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை கருத்தில் கொண்டு தான் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஏழை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362