தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BREAKING : தேவாரம் பாடிய சிவனடியார்கள் 40 பேர் கைது.! சிதம்பரத்தில் பரபரப்பு.! 

#BREAKING : தேவாரம் பாடிய சிவனடியார்கள் 40 பேர் கைது.! சிதம்பரத்தில் பரபரப்பு.! 

Chidambaram natarajar temple lord shiva devotees arrested Advertisement

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் தேவாரம் பாடிய சிவனடியார்கள் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாகவே சிதம்பரம் கோவில் தீட்சிதர்களுக்கும், சிவனடியார்களுக்கும் பிரச்சனைகள் இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில், தமிழ் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சேலம் சத்யபாமா உள்ளிட்ட சிவனடியார்கள் பலரும் சேர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையின் மீது ஏறி  தேவாரம், திருவாசகம், சிவபுராணம் உள்ளிட்டவற்றை பாடி சங்கு ஊதினார்கள். 

Natarajar Temple

அப்போது சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இரு தரப்புக்கும் பிரச்சினை ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் போலீசார் சிவனடியார்களை அங்கிருந்து வெளியில் அழைத்துச் சென்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் 40 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Natarajar Temple #Chidambaram #Lord shiva devotees #arrested #Cuddalore
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story