×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமண ஆசைகாட்டி மோசம் செய்த காவலர்; கள்ளகாதலால் 3 மாத கருவுடன் தவிக்கும் பெண் காவலர்.!!

திருமண ஆசைகாட்டி மோசம் செய்த காவலர்; கள்ளகாதலால் 3 மாத கருவுடன் தவிக்கும் பெண் காவலர்.!!

Advertisement

 

சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பவித்ரன் (வயது 30). இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கின்றனர். தனது குடும்பத்தோடு ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். 

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது பெண் காவலர், வியாசர்பாடி காவல் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் செம்பியம் காவல் குடியிருப்பில் வசித்து வருகிறார். 

ஒரே காவல் நிலையத்தில் இவர்கள் பணியாற்றி வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் நெருங்கி பழகி பல இடங்களுக்கு ஜோடியாக சென்று வந்துள்ளனர். 

காவலரான பவித்ரன் தனக்கு திருமணம் ஆகி இருப்பதை மறைத்து, உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். 

இதனால் பெண் காவல்துறை அதிகாரி மூன்று மாத கர்ப்பமான நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி இருக்கிறார். அப்போது அவருக்கு திருமணம் ஆகி குடும்பம் இருப்பது தெரிய வரவே, அதிர்ச்சி அடைந்த பெண் காவலர் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு உறுதியானதால் பவித்ரன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #சென்னை #வியாசர்பாடி #vellore #Latest news #Sexual Harrasment
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story