×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ட்ராபிக் காவலருக்கு பளார் விட்ட போதைப்பெண் ஆண் நண்பருடன் கைது.. சென்னையில் பகீர் சம்பவம்.!

ட்ராபிக் காவலருக்கு பளார் விட்ட போதைப்பெண் ஆண் நண்பருடன் கைது.. சென்னையில் பகீர் சம்பவம்.!

Advertisement

 

சென்னையில் உள்ள வள்ளுவர்கோட்டம் பகுதியில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு நேரத்தில் நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, காவல் அதிகாரிகள் ராமமூர்த்தி, நந்தகுமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அச்சமயத்தில், ஜெமினி பாலத்தில் இருந்து வள்ளுவர்கோட்டம் நோக்கி சொகுசு கார் வந்துள்ளது. 

அதனை இடைநிறுத்திய அதிகாரிகள் சோதனை செய்தபோது, காரை இயக்கி வந்த பெண்மணியும் - ஆண் நண்பரும் மதுபோதையில் இருந்துள்ளனர். இதனால் காவலர் இராமமூர்த்தி பெண்ணை பிரீதிங் அனலைசர் கருவியில் வாயை வைத்து ஊதக்கூறி பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண், பெண்ணை எப்படி ஊதச்சொல்வீர்கள்? என தகராறு செய்துள்ளார். 

மேலும், தகராறின் போது ஆத்திரத்தில் காவலர் ராமமூர்த்தியின் கன்னத்தில் பளாரென அறைந்துள்ளார். இதனால் இருதரப்பு மோதல் ஏற்பட, சம்பவ இடத்திற்கு வந்த திருநங்கைகள் காரில் வந்த பெண்ணுக்கு ஆதரவாக செயல்பட்டு காவலர்களோடு சண்டையிட்டுள்ளனர். அப்போது பெண்மணி அங்கிருந்து நைசாக தப்பி சென்றுள்ளார். 

இதனையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் காரின் நம்பரை வைத்து நுங்கம்பாக்கம் மூர் சாலையை சேர்ந்த ஷெரின் பானு (வயது 48), மும்பை விமான நிலைய ஊழியர் விக்னேஷ் (வயது 30) ஆகியோரை கைது செய்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Valluvarkottam #Police Constable #drunken women #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story