×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மணமேடையில் மயங்கி விழுந்த மணப்பெண்.. மணமகனின் தலையில் இடியை இறக்கிய மணமகள்..!

மணமேடையில் மயங்கி விழுந்த மணப்பெண்.. மணமகனின் தலையில் இடியை இறக்கிய மணமகள்..!

Advertisement

சென்னையில் உள்ள பாடி, ஒளவை நகரில் வசித்து வருபவர் தினகரன் (வயது 35). தாம்பரம் பெரியார் நகரில் 31 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது. நேற்று காலை வண்ணாரப்பேட்டை நகரில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளன. 

இந்நிலையில், மணமேடையில் இருந்த மணப்பெண் திடீரென மயக்கமடைய, பதறிப்போன உறவினர்கள் அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, நான் வேறொரு வாலிபரை காதலிக்கிறேன். எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதால் மயங்குவது போல நடித்தேன் என்று தெரிவித்துள்ளார். 

இதனால் இருதரப்பும் அதிர்ச்சியடைந்த நிலையில், தன்னை மணமகள் ஏமாற்றிவிட்டதாக தினகரன் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, இருதரப்பும் காவல் நிலையத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதிகாரிகள் முன்னிலையில் பெண் வீட்டிற்கு மணமகன் வீட்டின் சார்பில் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் போன்றவை திரும்பி வழங்கப்பட்டது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Tondiarpet #tamilnadu #bride #marriage #police
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story