×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதலால் குழந்தை... தாய் செய்த பகீர் காரியம்.. விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்.!

கள்ளக்காதலால் குழந்தை... தாய் செய்த பகீர் காரியம்.. விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்.!

Advertisement

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்மணி, மற்றொருவருடன் திருமணம் செய்யாமல் குடித்தனம் நடத்தி குழந்தை பிறந்ததால் அதனை ரூ.ஒன்றரை இலட்சத்திற்கு விற்பனை செய்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் வசித்து வரும் 45 வயது பெண்மணி, குழந்தைகள் நல உறுப்பினராக இருந்து வருகிறார். இவர், இணையவழியில் செம்பியம் காவல் துறையினருக்கு புகார் அனுப்பியுள்ளார். அந்த புகாரில், "பெரம்பூரில் உள்ள கண்ணபிரான் கோவில் தெருவை சேர்ந்த பெண்மணி உதயா (வயது 29). 

இவர், கடந்த டிசம்பர் மாதத்தில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தையை பணத்திற்கு விற்பனை செய்துள்ளார். அவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் உதயாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், உதயாவின் கணவர் மணிகண்டன். இவர்கள் இருவரும் பெரம்பூர், கண்ணபிரான் கோவில் தெருவில் வசித்து வருகிறார்கள். தம்பதிகளுக்கு 7 வயதுடைய மகன் இருக்கிறார். 

இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பாபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் திருமணம் செய்யாமல் குடித்தனம் நடத்தி வந்ததால், குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை ஆதி என்ற பெண்ணின் மூலமாக ரூ.ஒன்றரை இலட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது. 

இதனையடுத்து, உதயாவை கைது செய்த காவல் துறையினர், அவரின் வாக்குமூலத்தின் பேரில் ஆதியை கைது செய்துள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Royapuram #Perambur #tamilnadu #Affair #baby
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story