×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BREAKING: அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

#BREAKING: அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Advertisement

 

தேனி, விருதுநகர், கோவை உட்பட பல மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கான வாய்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய பகுதிகளில் நிலவி வரும் சுழற்சி காற்று மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 3 முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு தேனி, விருதுநகர், தென்காசி, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #rain #Rain alert #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story