×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சென்னையை வாட்டி வதைத்த வெயில்; 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

சென்னையை வாட்டி வதைத்த வெயில்; 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Advertisement

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில் தென் இந்திய பகுதிகளில் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 26-ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

27-ஆம் தேதியை பொறுத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

28-ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29 மற்றும் 30-ம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலையாக 26 மற்றும் 27-ம் தேதிகளில் தமிழகத்தில் 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம். அதிகபட்ச வெப்பநிலை, அதிகபட்ச ஈரப்பதம் காரணமாக வெப்ப அழுத்தமான ஹீட் ஸ்ட்ரெஸ் ஏற்படும். 

அசௌகரியமும் ஏற்படலாம். தலைநகர் சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். 

அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 26-ம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை கேரள கடலோரபகுதி, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிகாற்று வீசும் என்பதால் இப்பொழுது செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

29-ஆம் தேதி தென்தமிழக கடலோர பகுதி, அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Chennai RMC #rain #heat
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story