#BigBreaking: அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
#BigBreaking: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உட்பட 9 மாவட்டங்களில் 3 மணிநேரத்திற்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தின் கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பல மாவட்டங்களில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வரும் 3 மணிநேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362