×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BREAKING: அடுத்த 2 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

#BREAKING: அடுத்த 2 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Advertisement

 

கடலூர், அரியலூர் உட்பட 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை அறிவிக்கப்பட்டுள்ள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், அடுத்த 2 மணிநேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, கரூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Chennai RMC #rain #சென்னை #மழை #வானிலை நிலவரம்
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story