×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மக்களே உஷார்.. 13 மாவட்டங்களுக்கு அலெர்ட்... இன்று வெளுக்கப்போகும் கனமழை..! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!!

மக்களே உஷார்.. 13 மாவட்டங்களுக்கு அலெர்ட்... இன்று வெளுக்கப்போகும் கனமழை..! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!!

Advertisement

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கரூர், சேலம், கோயம்புத்தூர், திருப்பத்தூர், நாமக்கல், திருவண்ணாமலை, தேனி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #rain #alert #chennai
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story