×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொடரும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை.! தனி வார்டுகளாக மாறும் ரயில்வே பெட்டிகள்..!

Chennai rails are changed to isolation wards

Advertisement

கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தால் தமிழகத்தில் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் அனைத்து அரசு மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அதனை அடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில்  கொரோனாவால் பாதிக்கப்பட கூடியவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவமனையாக மாற்றி 200 மருத்துவர்கள் 200  செவிலியர்கள்  100 மருத்துவம்  சார்ந்த பணியாளர்கள் 180 தூய்மை பணியாளர்கள்  40  பாதுகாவலர்களை பணியமர்த்த  உத்தரவு பிறப்பித்தது.

மேலும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கான தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒருவேளை கொரோனா பாதிப்பு அதிகமானால் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் அளவிற்கு வசதியை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ரயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றும் பணியில் தெற்கு ரயில்வே செயல்பட்டு வருகிறது. தற்போது எந்த ரயில்களும் இயங்காமல் இருப்பதால் அந்த ரயில் பெட்டிகளை சிகிச்சைக்காக பயன்படுத்தும் யோசனை பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rails to hospital #Isolation wards at trains #Tn government
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story