பலே ஐடியா....சொகுசு காரில் படுக்கையறை... 37 ஏ டி எம் கார்டுகள்... வட மாநில அழகிகள்... வசமாக சிக்கிய பெங்களூர் புரோக்கர்.!
பலே ஐடியா... சொகுசு காரில் படுக்கையறை... 37 ஏ டி எம் கார்டுகள்... வட மாநில அழகிகள்... வசமாக சிக்கிய பெங்களூர் புரோக்கர்.!
சென்னையில் நூதன முறையில் வடமாநில பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பெங்களூரைச் சார்ந்த தரகரை சென்னை விபச்சார தடுப்பு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் விபச்சார தடுப்பு பிரிவிற்கு உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான காவல்துறையினர் ரகசிய தகவலின் அடிப்படையில் ஜூன் மூன்றாம் தேதி அன்று மடிப்பாக்கம் சாஸ்திரி நகர், பஜார் பிரதானச்சாலை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சாலையோரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சோர்ஸ் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த காருக்குள் ஒரு வட மாநில பெண் இருப்பதையும் காருக்கு வெளியே ஆண் ஒருவர் இருப்பதையும் கண்ட காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது வட மாநிலத்திலிருந்து மாடல் அழகிகளை அழைத்து வந்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சொகுசு கார்களையே படுக்கையாக பயன்படுத்தி வந்ததும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சார்ந்த சல்மான் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர் மீது சென்னையிலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் வடமாநிலத்தில் இருந்து அதிக பணம் தருவதாக வாதநலிகளை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் அந்த மாடல் நிலையை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர் காவல்துறையினர். இந்த விபச்சார கும்பலிடம் இருந்து சொகுசு கார் 10 செல்போன்கள் மற்றும் 37 ஏடிஎம் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362