×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பயங்கரம்... நண்பரை பிளேடால் கழுத்தை அறுத்த இளைஞர்... மேலும் ஒருவர் கைது.!

பயங்கரம்... நண்பரை பிளேடால் கழுத்தை அறுத்த இளைஞர்... மேலும் ஒருவர் கைது.!

Advertisement

ஆவடி அருகே குடிபோதையில் வந்த மர்ம நபர்கள் தனியார் நிறுவன ஊழியரின் கழுத்தை பிளேடால் அறுத்து சம்பவம் அப்போதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

ஆவடி கபடி பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆரிப் 26 வயதான இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் நண்பர் வசந்த வேலன். இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி ஆர் எஸ் தனது சகோதரர் அசரஃப் அலூயின் கடைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த வசந்த வேலன் மற்றும் இரண்டு மர்ம நபர்கள் குடிபோதையில் ஆரிபிடம்  தகராறு செய்துள்ளனர்.

அப்போது இவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வசந்த வேலன்  மற்றும் அவருடன் வந்த நண்பர்கள்  பாத்திரத்தில் தாங்கள் வைத்திருந்த பிளேடால் ஆர் எ பின் கழுத்தை அறுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்து இருக்கிறார்  ஆரிப். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்தா அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தலைமறைவாக இருந்த வசந்தவேலன் மற்றும்  கொடுங்கையூரைச் சார்ந்த பிரகாஷ் ஆகியோரை கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் தலை விரைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #aavadi #friendsfight #manattacked #twoarrested
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story