×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போலி ஆவணங்கள் கொடுத்து ரூ2.76 கோடி கடன் பெற்று மோசடி.. 2 பேர் கைது., பரபரப்பு தகவல்..!

போலி ஆவணங்கள் கொடுத்து ரூ2.76 கோடி கடன் பெற்று மோசடி.. 2 பேர் கைது., பரபரப்பு தகவல்..!

Advertisement

தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்களை கொடுத்து ரூ.2 கோடியே 76 லட்சம் கடன் பெற்ற இருவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள தி.நகர் பகுதியில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், அங்கு சென்ற ரவி மற்றும் மஞ்சு என்ற இருவர், தாங்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு M.R Garden Service நிறுவன உரிமையாளர்கள் எனக்கூறி கடன் பெற்றுள்ளனர். 

மேலும், இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு இடத்தின் ஆவணத்தை அடமானம் வைத்துள்ளனர். தொடர்ந்து வந்தவர்கள் பெரிய இடம் என்பதால் நிதி நிறுவன அலுவலர்களும் உடனடியாக ஆவணத்தை வாங்கிக் கொண்டு பணம் அளித்துள்ளனர். பின் அவர்கள் சென்றபிறகு ஆவணத்தை சரிபார்த்த போது, அவைகள் போலியானவை என தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அலுவலர்கள் உடனடியாக காவல்துறையினரிடம் புகாரளித்த நிலையில், புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மஞ்சு, ரவி ஆகிய இருவரையும் தேடி பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில் போலி ஆவணங்களை கொடுத்து ரூ.2 கோடியே 76 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக அவர்களே ஒப்புக்கொண்டனர். இதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #police #Finance #arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story