×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தலைக்கேறிய போதையால் தந்தையை சுவற்றில் முட்டவைத்து கொலை செய்த மகன்.!

தலைக்கேறிய போதையால் தந்தையை சுவற்றில் முட்டவைத்து கொலை செய்த மகன்.!

Advertisement

சென்னையில் உள்ள பெரியபாளையம், ஆரணி தமிழ் காலனியில் வசித்து வருபவர் வேணு (வயது 52). இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் பிள்ளைகள், ஒரு மகன் உள்ளனர். இவரின் மகன் மணிகண்டன் (வயது 21). 2 பெண்களுக்கும் திருமணம் முடிந்து, அவர்கள் கணவருடன் வசித்து வருகிறார்கள். 

இதனால் தந்தை மற்றும் மகன் வீட்டில் இருக்கும் நிலையில், இருவருக்கும் மகள் சாப்பாடு எடுத்து வந்து கொடுப்பது வழக்கம். மணிகண்டன் மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான நிலையில், போதையில் அவ்வப்போது தந்தையுடன் சண்டையிடுவது வழக்கம். நேற்று தேர்தல் நாளிலும் மணிகண்டன் காலையில் இருந்தே போதையில் மிதந்துள்ளார். அப்போது, வழக்கம்போல தந்தையிடம் அவர் சண்டையிட்டு இருக்கிறார். 

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த மணிகண்டன் தந்தையின் தலையை பிடித்து சுவற்றில் மோதவைத்து கொலை செய்துள்ளார். சுவரில் இருந்த கல் வேணுவில் தலையில் குத்தி மயங்கி விழுந்த நிலையில், மணிகண்டன் போதையில் அப்படியே உறங்கி இருக்கிறார். போதை தெளிந்ததும் தந்தை உயிரிழந்துவிட்டதை உறுதி செய்த மணிகண்டன், வருத்தத்தில் தானும் தற்கொலை செய்ய எண்ணி வீட்டின் வெளியே இருந்த மின் கம்பத்தில் மோதியுள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மணிகண்டனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது விபரீதம் புரிந்துள்ளது. இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வேணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மணிகண்டனையும் கைது செய்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Periyapalayam #father #son #kill #police #Investigation #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story