×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம்..4 பெண்கள்., 3 ஆண்கள்.. எஸ்கேப் ஆன வாடிக்கையாளர்கள்?..!

மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம்..4 பெண்கள்., 3 ஆண்கள்.. எஸ்கேப் ஆன வாடிக்கையாளர்கள்?..!

Advertisement

சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலையில் தனியார் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதி கட்டிடத்தில் இருக்கும் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடைபெறுவதாக நுங்கம்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து, மசாஜ் சென்டரை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தபோது விபச்சாரம் நடைபெறுவது உறுதியாகவே, நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பெண்களை வைத்து விபச்சார தொழிலில் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

எம்.பி.கே நகர் தீபக் (வயது 37), குன்றத்தூர் அசோக் குமார் (வயது 31), போரூர் அருண்குமார் (வயது 23) ஆகியோர் விபச்சார தொழிலை நடத்தி வந்துள்ளனர். மேலும், 4 பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களுக்கு பின்னனியில் விபச்சார கும்பல் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #tamilnadu #Nungambakkam #prostitution
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story