×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

16 வயது சிறுமியை ஏமாற்றிய சென்னை காவலர் கைது.. சி.பி.சி.ஐ.டிக்கு வழக்கு மாற்றம்.!

16 வயது சிறுமியை ஏமாற்றிய சென்னை காவலர் கைது.. சி.பி.சி.ஐ.டிக்கு வழக்கு மாற்றம்.!

Advertisement

சென்னையில் உள்ள மாதவரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். மாதவரம் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் மகேஷ். 

காவலர் மகேஷ் சிறுமியிடம் நட்பாக பழகுவது போல நடித்து, திருமணம் செய்வதாகவும் ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் தெரியவருகிறது. பின்னர், சிறுமியிடம் இருந்து விலக தொடங்கியுள்ளார். 

இதனால் செய்வதறியாது திகைத்த சிறுமி, காதலரான காவலரிடம் சென்று நியாயம் கேட்டும் பலனில்லை. இதனையடுத்து, பெற்றோரிடம் தகவலை தெரிவிக்கவே, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணையை கிடப்பில் போட்ட நிலையில், நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்து உத்தரவிட்டு, காவலரை கைது செய்ய ஆணையிட்டனர். 

இதனையடுத்து, வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள், சிறுமியை ஏமாற்றிய காவலர் மகேஷின் மீது கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Madhavaram #Minor Girl #Abuse #police #Cbcid
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story