மதுபோதையில் இளைஞரின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற பயங்கரம்.. கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் பதறவைக்கும் சம்பவம்.!
மதுபோதையில் இளைஞரின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற பயங்கரம்.. கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் பதறவைக்கும் சம்பவம்.!
நண்பர்களுக்குள் மதுபோதையில் ஏற்பட்ட பிரச்சனையில், இளைஞரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில், 35 வயதாகும் இளைஞரின் தலையில் இரத்த காயத்துடன் மயங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வாலிபரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததும் அம்பலமானது.இதனையடுத்து, கொலைவழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இளைஞர் யார்? அவரை யார் எதற்காக? கொலை செய்தனர் என விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொலையான இளைஞர் சக்தி (வயது 35) என்பதும், அவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கியிருந்து வந்ததும் தெரியவந்தது. நேற்று முன்தினத்தில் தனது நண்பர்களுடன் மதுபானம் அருந்திய நிலையில், போதையில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் அம்பலமானது. சக்தியின் நண்பர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362