அண்ணன் தற்கொலை மர்மம்.. அண்ணனின் கள்ளக்காதலியுடன் ஜல்ஸா செய்து கொலை..! பழிதீர்த்த தம்பி.!
அண்ணன் தற்கொலை மர்மம்.. அண்ணனின் கள்ளக்காதலியுடன் ஜல்ஸா செய்து கொலை..! பழிதீர்த்த தம்பி.!
அண்ணனின் தற்கொலையில் உள்ள மர்மத்தை கண்டறிய, அண்ணனின் கள்ளகாதலியுடன் நெருங்கி பழகி, அவரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள கேளம்பாக்கம், காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஷா இன்ஸா (வயது 26). இவருக்கும், வரதராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். வரத்ராஜ் மரணடைந்ததை தொடர்ந்து, ஷா இன்ஸா தனது மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி ஷா இன்ஸாவின் குழந்தைகள் பாட்டியுடன் வெளியே சென்றுவிட, வீட்டில் தனியாக இருந்த ஷா இன்ஷாவை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பி சென்றனர். மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்த இன்ஸாவின் தாயார் மகள் கொலை செய்யப்பட்டு பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, வண்டலூர் உதவி ஆணையர் சிங்காரவேலு, கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் இராதாகிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர், ஷா இன்ஷாவின் உடலை பார்க்கையில் அவர் கழுத்தை நெரித்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படவே, கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், 3 பேர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது.
கொட்டிவாக்கம் இளங்கோ நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி மற்றும் அவனின் நண்பர்களான கோட்டூர்புரம் சுரேஷ் என்ற சுக்குக்காபி, ஆனந்த் ஆகியோரை அதிகாரிகள் தேடி வந்தனர். இவர்கள் 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள், வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்தியிடம் விசாரணை நடந்தது.
விசாரணையில், கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வந்த ஷா இன்ஷாவுக்கு கார்த்திக்கின் சகோதரர் விஜயுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஷா இன்ஷாவுடன் பழகத்தொடங்கிய தொடங்கிய சில மாதத்தில் விஜய் தீடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். அண்ணன் தற்கொலைக்கு காரணம் என்ன? என்று ஷா இன்ஷாவிடம் கார்த்திக் பலமுறை கேட்டு வந்துள்ளார்.
அவரது கேள்விக்கு ஷா இன்ஸா சரிவர பதில் அளிக்காத நிலையில், ஷா இன்ஷாவுடன் நெருங்கி பழகி அவரை கார்த்திக் கொலை செய்துள்ளார். அவரிடம் பழகி உண்மையை தெரிந்துகொள்ள நினைத்து, கடந்த 2 ஆம் தேதி அண்ணனின் தற்கொலைக்கு காரணம் குறித்து கேட்டுள்ளார். ஷா இன்ஸாவோ அதையெல்லாம் கேட்க வேண்டாம். வந்த வேலையை பார் என்று தெரிவித்துள்ளார்.
அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு மீண்டும் அண்ணன் விஜயின் மரணம் குறித்து கேட்கையில், ஆத்திரமடைந்த ஷா இன்ஸா திடீரென அதையே கேட்டால் அவனின் நிலை தான் உனக்கும் என்று கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், ஷா இன்ஷாவை கொலை செய்ய திட்டமிட்டு, தனது நண்பர்களான ஆனந்த், சுரேஷை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
இவர்கள் 3 பேரும் சேர்ந்து ஷா இன்ஷாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். கைதாகிய வாலிபர்கள் 3 பேரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அண்ணனின் கொலைக்கான மர்மத்தை கண்டறிய, தம்பி அண்ணனின் கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்து அவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கள்ளக்காதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டது என்னவோ தாயை தேடி கதறும் அந்த 2 பிஞ்சு குழந்தைகள் தான்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362