×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மதுபானக்கடையின் பூட்டை உடைத்து 110 மதுபானம் திருட்டு.. சென்னையில் 4 பேர் கைது.!

மதுபானக்கடையின் பூட்டை உடைத்து 110 மதுபானம் திருட்டு.. சென்னையில் 4 பேர் கைது.!

Advertisement

பூட்டியிருந்த மதுபான கடையின் பூட்டை உடைத்து 110 மதுபானத்தை திருடிய வாலிபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னையில் உள்ள ஜாபர்கான்பேட்டை பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. கடத்த 22 ஆம் தேதி கடையை மூடிவிட்டு, 23 ஆம் தேதி ஊரடங்குக்கு பின்னர், 24 ஆம் தேதி காலை கடையின் மேற்பார்வையாளர் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் கடையின் பூட்டை உடைத்து மதுபானங்கள் திருடப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. 

இதனையடுத்து, கடையின் மேற்பார்வையாளர் கேசவன் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துரோணர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவே, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகள் கண்காணிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர், மதுபான கடையின் பூட்டை உடைத்து மதுபானம் திருடிய பிரகாஷ் (வயது 21) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். 

இவரிடமிருந்து 110 மதுபான பாட்டில்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த திருட்டு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த பிரகாஷின் நண்பர்களான ராஜேஷ் என்ற புளிமூட்டை, விக்னேஷ், வசந்த் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Jafferkhanpet #tasmac #liquor #police #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story