#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தமிழகத்தில் 1ம் தேதி வரையில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்யும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் காலை நேரத்தில் பள்ளி-கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் மழையில் இருந்து பாதுகாப்பாக செல்ல குடை எடுத்து செல்ல அறிவுறுத்தப்படுகிறது.