துரைப்பாக்கம் ஹோட்டலில் பலமுறை உல்லாசம்.. இன்ஸ்டா காதலியை கைவிட்ட காதலன் அதிரடி கைது.!
துரைப்பாக்கம் ஹோட்டலில் பலமுறை உல்லாசம்.. இன்ஸ்டா காதலியை கைவிட்ட காதலன் அதிரடி கைது.!
சென்னையில் உள்ள மடிப்பாக்கம், ராம் நகரில் வசித்து வருபவர் ராகுல் சிராஜ் (வயது 23). இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக அதே பகுதியை சேர்ந்த பெண்ணிடம் பழகி வந்துள்ளார். இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணும் அவருடன் பழகி வந்துள்ளார்.
இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், சிராஜ் பெண்ணை காதலிப்பதாக பேசி, திருமணம் செய்வதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனால் இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்த நிலையில், துரைப்பாக்கத்தில் இருக்கும் தங்கும் விடுதியில் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர்.
மேலும், ஒருகட்டத்தில் தனது குடும்ப கஷ்டத்தினை கூறி சுயதொழில் செய்வதாக படிப்படியாக பெண்ணிடம் இருந்து ரூ.10 இலட்சம் வரை பணம் பெற்றுள்ளார். பெண்மணி காதலன் திருமணம் செய்வான் என்ற நம்பிக்கையில் அனைத்தையும் கேட்டபோதெல்லாம் செய்துள்ளார். இதற்கிடையில், கயவன் பெண்ணை திருமணம் செய்வதாக தெரியவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி ராகுல் சிராஜின் மீது கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தினர். தலைமறைவான ராகுல் சிராஜை நாகர்கோவிலில் வைத்து காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362