#BigBreaking: சென்னை இரயிலில் பயங்கர தீ விபத்து; அலறியடித்து ஓடிய பயணிகள்..!
சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட இரயில் தீ விபத்தில் சிக்கியது.
மும்பை நோக்கி புறப்பட்ட இரயில் தீ விபத்தில் சிக்கியது.
இன்று மாலை சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து மும்பை நோக்கி லோக்மணியா திலக் அதிவிரைவு இரயில் பயணம் செய்தது.
இந்த இரயில் புறப்பட்ட சில நிமிடத்திலேயே பேசின் பாலம் அருகே செல்கையில் திடீரென தீ பிடித்து விபத்திற்குள்ளானது.
இந்த தீ விபத்து ஏ.சி கோச்சில் ஏற்பட்டதாகவும், பேட்டரி கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பயணிகள் இரயிலில் இருந்து அவசர கதியில் வெளியேறினர்.
தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.