×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigBreaking: சென்னை கடற்கரை இரயில் நிலையத்தில் பயங்கர விபத்து.. பரபரப்பு சம்பவம்.!

#BigBreaking: சென்னை கடற்கரை இரயில் நிலையத்தில் பயங்கர விபத்து.. பரபரப்பு சம்பவம்.!

Advertisement

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், வேளச்சேரி போன்ற புறநகர் பகுதிகளுக்கு, தென்னக இரயில்வே சார்பில் மின்சார புறநகர் சேவை வழங்கப்படுகிறது. இந்த இரயில்கள் சில நேரங்களில் சிக்னல் கோளாறினால் ஒரே தண்டவாளத்தில் சென்று நிறுத்தப்பட்டு மீண்டும் சேவை வழங்கப்படும் சம்பவம் அவ்வப்போது நடந்து வந்தது.

இந்த நிலையில், இன்று சென்னை கடற்கரை இரயில் நிலையத்தில் மின்சார இரயில் தனது நடைமேடையில் நிறுத்த வரும் போது திடீரென அதிவேகத்தில் பயணித்து தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகளுக்கு நல்ல வேலையாக எந்த காயமும் இல்லை. 

ஆனால், நிகழ்விடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பான விசாரணை இரயில்வே அதிகாரிகளால் தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #tamilnadu #Beach Railway Station #train #Suburban Train
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story