×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கால் கேளுக்காக காதல் கணவன்.. உள்ளே புகுந்த மனைவி..! திபுதிபுவென., நடந்தது தெரியுமா?.. அரண்டுபோன புருஷ்.!!

கால் கேளுக்காக காதல் கணவன்.. உள்ளே புகுந்த மனைவி..! திபுதிபுவென வந்த அதிகாரிகள்.. அரண்டுபோன கணவன்.!!

Advertisement

காதல் கணவன் கால் பாயாக மாறி பாலியல் தொழில் செய்ய தொடங்கி பக்ரைன் சென்ற நிலையில், காதல் மனைவி கணவனை சென்னை வரவழைத்து காவல் துறையினரிடம் சிக்க வைத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியை சார்ந்த இளம்பெண், தஞ்சாவூரை சார்ந்த அருண் ஜோஸ் என்ற நபரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் நீலாங்கரை பகுதியில் இருவரும் தனிக்குடித்தனம் சென்றுள்ளனர். 

இதற்குப்பின், அருண் ஜோசின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவே, திடீரென அவர் பக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். வெளிநாட்டிற்கு சென்றதும் மனைவியுடன் தொடர்பை துண்டித்த நிலையில், இருவரும் இன்ஸ்டாகிராம் கணக்கில் தொடர்பில் இருந்துள்ளனர். அதன் மூலமாக கணவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதை அறிந்துகொண்ட பெண்மணி, உண்மையை உணர்ந்துள்ளார். மேலும், திருமணம் நடைபெற்று முடிந்த நாட்களில் காதல் மனைவி என்றும் பாராமல் அவரை துன்புறுத்தியும் வந்துள்ளார். 

ஒரு சமயத்தில், தனது மனைவியை தவறான வழியில் ஈடுபடுத்த நினைத்த அருண் ஜோஸ், பெண் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்தவாறு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த நிலையில், கால்பாய் போல பெண்களுடன் ஒத்துழைப்பில் இருந்ததும் அம்பலமானது. 

மேலும், ஆபாச வீடியோ பார்ப்பது என அருண் ஜோசின் வாழ்க்கை திரும்பியதால், மனைவியை மறந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி காதல் கணவரின் மீது புகார் அளித்து, அவரை இந்தியாவிற்கு வரவழைத்து சிக்க வைக்கவும் முடிவு செய்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போலியான கணக்கை உருவாக்கிய பெண்மணி, மற்றொரு பெண் போல அருண் ஜோஸிடம் பேசியுள்ளார். 

தனது மனைவி தான் தன்னுடன் வேறொரு கணக்கில் இருந்து பேசுகிறார் என்பதை கூட அறியாமல் அருண் ஜோஸ் தனது வழக்கமான பாணியில் பேசி வந்துள்ளார். கணவனின் மனநிலையை புரிந்துகொண்ட காதல் மனைவி, சென்னைக்கு வாருங்கள், இங்கு பாலியல் தொழில் செய்யலாம் என்று ஆசை காண்பித்து இருக்கிறார். 

இந்த விஷயத்தை நம்பிய அருண் ஜோஸும் சென்னைக்கு வந்த நிலையில், காதல் மனைவியும் விடுதியில் அறை எடுத்து கால் கேள் போல கணவரிடம் பேசி இருக்கிறார். பக்ரைனில் இருந்து சென்னைக்கு வந்த அருண் ஜோஸ், விடுதியில் அறையெடுத்து அங்கு தனது காதல் மனைவியை கால் கேள் என நினைத்து வரவழைத்துள்ளார். 

விடுதிக்குள் உல்லாசமாக இருக்க போகிறோம் என்ற ஆசையுடன் காத்திருந்த அருண் ஜோசின் தலையில் இடி விழுந்தார் போல அழைப்பு மணியை அடித்துவிட்டு மனைவி உள்ளே வந்துள்ளார். முன்னதாகவே காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்ததன் பேரில், பெண்ணுடன் காவல் அதிகாரிகளும் வந்திருந்த நிலையில், அருண் ஜோஸ் தப்பி செல்ல வழியின்றி சிக்கிக்கொண்டார். 

அருண் ஜோசின் காதல் மனைவி அளித்த புகாரின் பேரில், விசாரணைக்காக அவரை அடையார் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடித்தனர். மேலும், அருண் யாருடன் தொடர்பில் இருந்தார் என்றும் விபரத்தை சேகரிக்கும் காவல் துறையினர், பாலியல் தொழிலில் வேறு யாரேனும் கூட்டாளிகள் உள்ளனரா? எனவும் விசாரணை செய்கின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #tamilnadu #Bahrain #prostitution #police #love marriage #Wife #Husband
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story