அதிகாரிகளிடமே நடித்த ஞானசேகரன்; வலிப்பு வந்ததாக நாடகமாடியது அம்பலம்.!
அதிகாரிகளிடமே நடித்த ஞானசேகரன்; வலிப்பு வந்ததாக நாடகமாடியது அம்பலம்.!

ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்ததாக 6 காவலர்களிடம் விசாரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 19 வயது கல்லூரி மாணவி, காதலருடன் தனிமையில் இருந்தபோது, அங்கு வந்த ஞானசேகரன் என்ற நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: #Breaking: பிரியாணிக்காக ஞானசேகரனிடம் தொடர்பில் இருந்த காவலர்கள்? - விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
நீதிமன்ற காவல்
7 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரி சினேக பிரியா தலைமையிலான அதிகாரிகள் தொடர் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் பல அதிர்ச்சி தகவல் தெரியவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வலிப்பு நாடகம்
ஞானசேகரன் மாணவியை மிரட்டும்போது போனில் பேசி சார் ஒருவர் என பேசியதால், யார் அந்த சார்? என கண்டறியும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனிடையே, நேற்று முன்தினம் திடீரென ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறி, அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் ஞானசேகரன் நாடகமாடியது அம்பலமானது. இதனால் அதிகாரிகளின் விசாரணையை மட்டுப்படுத்தும் எண்ணத்துடன் ஞானசேகரன் போலியாக நாடகமாடியது உறுதி செய்யப்படவே, காவல்துறையினர் மருத்துவமனையில் இருந்து அவரை விசாரணை நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
பிரியாணிக்கு பேசிய அதிகாரிகள்
மேலும், ஞானசேகரனின் கடந்த 6 மாதகால அழைப்புகளை ஆய்வு செய்தபோது, 6 அடையாறு காவல் நிலைய அதிகாரிகளுடன் அவர் பேசியது தெரியவந்தது. ஞானசேகரனிடம் பேசிய காவலர்களிடம் விசாரித்தபோது, பிரயாணிக்காக போனில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறியுள்ளனர்.
ஞானசேகரன் அரசியல் கட்சிப்பிரமுகர் என கூறப்படும் நிலையில், அவர் அண்ணா பல்கலைக்கழக சாலையில் பிரியாணி கடை வைத்தும் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மர்ம உறுப்பை தடவி.. பெண்ணிடம் அத்து மீறிய கயவன்.. கண்ணிமைக்கும் நேரத்தில் மாயம்.!