×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒருதலைக்காதலை ஏற்க மறுத்த சிறுமியிடம் பாலியல் சீண்டல், கொலை முயற்சி.. வீட்டு வாசலில் பயங்கரம்.!

ஒருதலைக்காதல் பாலியல் சீண்டல், கொலை முயற்சி.. சிறுமியின் வீட்டு வாசலில் நடந்த கொடூரம்.!

Advertisement

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து, கல்லால் தாக்கிய கொடூரன் போக்ஸோ சட்டத்தின் கீழ் குன்றத்தூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள அம்பத்தூர் பகுதியை சார்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமியை அப்பகுதியை சார்ந்த பாலா என்ற பாலசந்திரன் (வயது 25) ஒருதலையாக காதலிப்பதாக கூறி தொல்லை அளித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த டிச. 30 ஆம் தேதி சிறுமி வீட்டிற்கு வெளியே இருக்கையில், பாலா அங்கு வந்து சிறுமியை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி சத்தமிடவே, ஆத்திரமடைந்த பாலா கீழே இருந்த கல்லை எடுத்து சிறுமியை தாக்கி இருக்கிறார். 

மேலும், வெளியே இதுகுறித்து கூறினால் கொலை செய்திடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். சிறுமி பெற்றோரிடம் தகவலை தெரியப்படுத்தவே, சிறுமியின் பெற்றோர் T-13 குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.   

புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, பாலா என்ற பாலச்சந்திரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Ambattur #Kundrathur #tamilnadu #murder attempt #Sexual Harassment #one side love
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story