×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சென்னை ரயில் நிலையத்தில் காதலியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய காதலன்; முடிவில் இருவருக்கும் நேர்ந்த சோகம்.!

chennai - sheththuppattu - railway station - murder attemped lovers

Advertisement

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நேற்று இரவு இளம்பெண்ணும் வாலிபரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். சிறிது நேரத்தில் பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியுள்ளது. இதனால் அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்தப் பெண்ணை சரமாரியாக வெட்டியுள்ளார்.

அதன் பிறகு சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு இளம்பெண்ணை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் அந்த வாலிபரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து போலீசார் மேற்கண்ட முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தேன்மொழி, சுரேந்தா் அவர்களது பெயர் என்பது தெரியவந்துள்ளது. தேன்மொழி சென்னையில் கூட்டறவுத்துறை அலுவலகத்தில்  பணியாற்றி வருகிறார். நீண்ட நாட்களாக பழகி வந்த அவர்கள் அடிக்கடி சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் சந்தித்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #railway station #murder attempt
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story