ஒரு நொடி கவனிக்காம இருந்திருந்தா என்ன ஆயிருக்கும்?? சோதனை சாவடி மீது மோதிய லாரி.. வைரல் சிசிடிவி வீடியோ..
எல்லை சோதனை சாவடி ஒன்றில் லாரி மோதும் சிசிடிவி காட்சிகள் பார்ப்போரை பதறவைத்துள்ளது.
எல்லை சோதனை சாவடி ஒன்றில் லாரி மோதும் சிசிடிவி காட்சிகள் பார்ப்போரை பதறவைத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அருகே உள்ள எல்லை சோதனை சாவடி ஒன்றில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சாலையில் கண்டைனர் லாரி ஒன்று தாறுமாறாக வருவதை பார்த்த போலீசார் அங்கிருந்து சிதறி ஓடினர்.
இந்நிலையில் தாறுமாறாக வந்த கண்டைனர் லாரி அங்கிருந்த தடுப்புகளை இடித்து தள்ளி, சோதனை சாவடி மீது மோதியது. இந்த விபத்தில் சோதனை சாவடியின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்தது. லாரி தாறுமாறாக வருவதை போலீசார் கவனித்ததால், அனைவரும் அங்கிருந்து ஓடி பெரிய விபத்தில் இருந்து தப்பித்தார்.
லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் வெங்கடேசன் மது போதையில் லாரியை ஓட்டிவந்தது தெரியவந்தது. இந்நிலையில் லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362