தமிழகத்தில் சம்பள தேதி மாற்றம்.! அதிர்ச்சியில் ஊழியர்கள்..!
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் சம்பளம் வழங்குவதில் புதிய சிக்கல் எழுந்திருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களான மாநகர் போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் போக்குவரத்து கழகம் ஆகியவற்றில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் கடைசி தேதியில் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
அதேபோல் கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, சேலம் மற்றும் கோவை ஆகிய போக்குவரத்து கழகங்களில் மாதத்தின் கடைசி தேதியிலோ, அல்லது அடுத்த மாதத்தின் முதல் தேதியிலோ சம்பளம் வழங்கப்படும். இந்த தேதிகள் விடுமுறை தினமாக இருந்தால் அதற்கு முந்தைய தேதிகளில் சம்பளம் போடப்படும்.
இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் அந்தந்த அதிகாரிகள் முடிவு செய்யும் தேதிகளில் தான் சம்பளம் போடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில், சம்பள தேதியை மாற்றியது முறையல்ல என்றும், இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுவதால் பழைய முறையில் சம்பளம் போட வேண்டும் என போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.