×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோவையில் பரபரப்பு.. நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த போலீஸ் சஸ்பெண்ட்!

கோவையில் பரபரப்பு.. நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த போலீஸ் சஸ்பெண்ட்!

Advertisement

கோவை அருகே தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்த நபர் தங்க சங்கிலியை படித்துள்ளார்.

அதே போல் கோலார் பட்டியை சேர்ந்த அம்சவேணி என்பவரிடமும் பிஏபி அலுவலகம் அருகே நகை பறிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொள்ளாச்சி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டது செட்டிபாளையம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் சபரிகிரி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் ஏழரை பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இவர் பல இடங்களில் நடைபெற்ற நகை பருப்பில் தொடர்புள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குற்றவாளி சபரிகிரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Covai #Chain Snatching #arrest #Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story