×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பொதுமக்களே உஷார்.. செல்போன் பேட்டரி வெடித்து ஒருவர் பலி.!

பொதுமக்களே உஷார்.. செல்போன் பேட்டரி வெடித்து ஒருவர் பலி.!

Advertisement

கடலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவர் கல் புதூர் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் தினமும் கடையை மூடுவதற்கு முன்பு தேவையற்ற பொருட்களை தீயிட்டு எரிப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடுவதற்கு முன்பாக தேவையற்ற பொருட்களை தீயிட்டு எரித்துள்ளார். அப்போது தீயில் எரிந்து கொண்டிருந்த செல்போன் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது.

அப்போது பேட்டரி சிதறி வெடித்து விநாயகர் மூர்த்தி முகத்தில் பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விநாயகமூர்த்தியின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cellphone battery blast #Cuddalore #Katpadi #death #police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story