×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Breaking#: ரூ.2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்க தடை கோரி வழக்கு! நாளை விசாரணை

Case filled against distributing 2000 amount to tn people

Advertisement

இம்மாத இறுதிக்குள் அவரவர் வங்கிக் கணக்குகளில் ரூபாய் 2000 ஏற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அவர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 110 விதியின் கீழ் ரூ.2,000 வழங்கப்படும் அறிவித்தார். 

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் வகையில் இத்திட்டம் இருப்பதாக கூறி சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#High court #2000 rupees #Tn govt
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story