×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஏன் என் அண்ணியிடம் இப்படி நடந்து கொண்டீர்கள்.? தட்டிக்கேட்ட கொழுந்தன்.! இறுதியில் நடந்த கொடூர சம்பவம்.!!

கடலூர் மாவட்டத்தின் ம.பொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி பிரியா. இ

Advertisement

கடலூர் மாவட்டத்தின் ம.பொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி பிரியா. இவர் கடந்த வாரம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வரும் வழியில் நின்று கொண்டிருந்த 6 பேர், பிரியாவை ஆபாச வார்த்தையால் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வீட்டிற்கு வந்த பிரியா இதுபற்றி தனது கணவர் ரவிச்சந்திரனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரவிச்சந்திரன், தனது மனைவியை கிண்டல் செய்தவர்களிடம் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அந்த நபர்கள் ரவிச்சந்திரனை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து ரவிச்சந்திரனின் தம்பி வையாபுரி சம்பவ இடத்திற்கு சென்று ஏன் என் அண்ணியிடம் இப்படி நடந்து கொண்டீர்கள் கேட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த 6 பேரும் சேர்ந்து வையாபுரியை கல்லால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினர். பலத்த காயமடைந்த வையாபுரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு வையாபுரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரையும்  கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#young boy #Murder #brother-in-law
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story