உயிருடன் இருந்த அண்ணனை ஃப்ரீசர் பெட்டியில் அடைத்து வைத்த தம்பி! சேலத்தில் நடந்த கொடூரச்சம்பவம்.!
உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய அண்ணனை இறந்துவிட்டார் என குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சேலம் மாநகராட்சி கந்தம்பட்டி அருகே வசித்து வரும் 70 வயதான சரவணன் என்பவர், அவரது அண்ணன் பாலசுப்பரமணிய குமார் என்பவர் இறந்துவிட்டதாகக் கூறி, உடலை வைத்திடும் குளிர்சாதனப்பெட்டி பணியாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து குளிர்சாதனப்பெட்டியில் முதியவர் பாலசுப்பிரமணியத்தின் உடலை வைத்து, உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் குளிர்சாதன பெட்டியை திரும்ப எடுக்க வந்த பணியாளர்கள், குளிர்சாதனப் பெட்டிக்குள் முதியவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவரது சகோதரர் சரவணனிடம் குளிர்சாதன பெட்டியை திரும்ப எடுக்க வந்த பணியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவர் எவ்வித அதிர்ச்சியையும் வெளிப்படுத்தாமல், விரைவில் உயிரிழந்து விடுவார் எனக் கூறியுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362