×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பள்ளி மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

பள்ளி மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

Advertisement

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மனதுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசாருதீன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து அசாருதீன் மனைவியிடம் வீட்டிலிருந்து பணம் எடுத்து வருமாறும், ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்புமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி அசாருதீனுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன்னை காதலிக்க வேண்டும் என்று தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தன்னை காதலிக்கவில்லை என்றால் முகத்தில் ஆசிட் வீசுவதாக அசாருதீன் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து உடனடியாக மாணவியின் பெற்றோர் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அசாருதீன் மற்றும் அவருக்கு உடனடியாக இருந்த அவரது நண்பர் ஆகாஷ் இருவரையும் கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Covai #Acid attack #pollachi #Crime #Pocso Act
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story