×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உதவி செய்வது போல் நடித்து காட்டுப் பகுதியில் அத்திமீறிய நபர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

உதவி செய்வது போல் நடித்து காட்டுப் பகுதியில் அத்திமீறிய நபர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

Advertisement

திருச்சி அருகே பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் பத்தாளப்பேட்டை வள்ளுவர் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி தனலட்சுமி. இவர்கள் வீட்டில் இடப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாக தனலட்சுமி அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார்.

இதனையடுத்து ரமேஷ் தனது இருசக்கர வாகனத்தில் தனலட்சுமி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது பிரியங்கா நகர் காட்டுப்பகுதிக்குள் ரமேஷ், தனலட்சுமி அழைத்துச் சென்று அத்துமீறி நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தனலட்சுமி காவல் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரமேஷை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#trichy #harassment #Crime #arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story