×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!

Advertisement

சென்னையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த அஸ்வினி கே கே நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த அழகேசன் என்பவர் அஸ்வினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். 

இதனையடுத்து மாணவியை பின்தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி, தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அஸ்வினி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அழகேசனை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த அழகேசன் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்லூரி வாசலில் வைத்து அஸ்வினியை கத்தியால் குத்திய கொலை செய்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அழகேசனை பிடித்து போலீஸாசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் அழகேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும் 10,500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #one side love #Crime #Murder #maduravoyal
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story