×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மிதந்து வந்த உடல்.! அதிர்ச்சியில் பொதுமக்கள்.! காவல்துறை விசாரணை.!

மிதந்து வந்த உடல்.! அதிர்ச்சியில் பொதுமக்கள்.! காவல்துறை விசாரணை.!

Advertisement

ஈரோடு மாவட்டத்தில் வாய்க்காலில் மிதந்து வந்த சடலத்தால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் புங்கம்பாடியில் உள்ள கீழபவானி வாய்க்காலில் சடலம் ஒன்று மிதந்து வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் காவல்துறையினர்.

இதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபருக்கு 40 வயது இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த நபர் யார்.? எந்த ஊரைச் சேர்த்தவர்.? அவர் நீரில் மூழ்கி இறந்தாரா.? அல்லது யாராவது கொலை செய்து அவரது உடலை கால்வாயில் வீசினார்களா.? என்பது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #erode #Body in Drainage #Police Enquiry #Public Shock
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story